வேலூரில் வாக்குபதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு

வேலூரில் வாக்குபதிவு இயந்திரம் மற்றும் VVPAT இயந்திரம் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2024-01-26 05:24 GMT

விழிப்புணர்வு வாகனம் 

ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்குபதிவு இயந்திரம் மற்றும் VVPAT இயந்திர விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு வாகனம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கு சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறிப்பாக மக்கள் கூடும் இடங்களில் இந்த வாகனம் நிறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன் நேர்முக உதவியாளர் (பொது)கலியமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் கவிதா, அலுவலக மேலாளர்கள் பாலமுருகன் (பொது), பழனி (குற்றவியல்) தேர்தல் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News