சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2024-05-26 16:00 GMT
சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்....

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றதுவிருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் வெடி விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த விபத்துகளை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் சிவகாசியில் உள்ள ஒரு பிரபல பட்டாசு நிறுவனம் விபத்து இன்றி பட்டாசு உற்பத்தி செய்வது எப்படி? என்ற விழிப்புணர்வு பயிற்சி முகாமை நேற்று நடத்தியது.

பயிற்சி வகுப்பை காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் ஏ.பி.செல்வராஜன் தொடங்கி வைத்தார். இதில் 130க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சிகளை தணிகைவேல்பாண்டியன், கார்த்திக் ஆகியோர் அளித்தனர். நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகளை கார்த்திக் செய்திருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் பயிற்சி வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்து இதுபோன்ற பயிற்சிகளை மாவட்ட நிர்வாகமும் நடத்த வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News