ஆதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொட்டரையில் விழிப்புணர்வு

ஆதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொட்டரையில் விழிப்புணர்வு வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் முகாம் குறித்து எடுத்துரைப்பு ஆதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொட்டரை கிராமத்தில் 100 நாள் பணியாளர்களிடம் பல்வேறு சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

Update: 2024-06-29 07:28 GMT

ஆதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொட்டரையில் விழிப்புணர்வு

ஆதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொட்டரையில் விழிப்புணர்வு வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் முகாம் குறித்து எடுத்துரைப்பு ஆதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொட்டரை கிராமத்தில் 100 நாள் பணியாளர்களிடம் பல்வேறு சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொட்டரை கிராமத்தில் 100 நாள் பணியாளர்கள் மத்தியில் ஆதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்துசாமி மற்றும் ஆதனூர் சுகாதார ஆய்வாளர் ராம்குமார் அவர்கள் சுகாதார சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமும் நடைபெறுகிறது என்பதை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினர். . மேலும் திறந்தவெளியில் மலம் கழிக்காமல் கழிப்பறையை பயன்படுத்துதல், முறையாக சோப்பு போட்டு கை கழுவுதல், ஈ மொய்த்த சுகாதாரமற்ற உணவுகளை தவிர்த்தல் போன்ற சுகாதார பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வலியுறுத்தினார்.
Tags:    

Similar News