மயிலாடுதுறை: வரி செலுத்துவதற்கான விழிப்புணர்வு கூட்டம்

அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்துவது தொடர்பாக மயிலாடுதுறையில் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்பு

Update: 2023-12-12 02:54 GMT

வரி செலுத்துவதற்கான விழிப்புணர்வு கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேம்பர் ஆப் காமர்ஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருமான வரித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மயிலாடுதுறையில் வருமான வரியை முன்கூட்டியே செலுத்துவது, தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் வருமான வரித்துறை சார்பில் நடைபெற்றது. முழுமையாக 100 சதவீதம் வரியை, ஒரே தவணையில் செலுத்த முடியாத நபர்களின், சிரமத்தைக் குறைக்கும் வகையில், ஒரு குறிப்பிட்ட தொகையை ஜூன், செப்டம்பர், டிசம்பர், மார்ச் என 4 தவணைகளில் செலுத்தலாம். வருமான வரியை முன்கூட்டியே செலுத்தினால் தேவையற்ற வட்டி செலுத்துவதை தவிர்க்க முடியும்.  கடந்த ஆண்டைக் காட்டிலும் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு  அதிகரித்துள்ளது என  நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய இந்திய வருவாய் பணித்துணை உதவி ஆணையர் சீனிவாசன் தெரிவித்தார்.  வர்த்தக சங்க தலைவர் மதியழகன், ஏடி தமிழ்ச்செல்வன், ஆடிட்டர் பெர்னார்டு உட்படபலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News