சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-06-22 05:18 GMT

வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணைக்காவல் கண்காணிப்பாளா. பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணைக் காவல் கண்காணிப்பவளவன் மற்றும் புள்ளியியல் ஆய்வாளர் சாகித் உதவி ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவிகளிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய துணைக் காவல் கண்காணிப்பாளர் . மாணவ மாணவியர்களிடத்தில் சமூக நீதி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த விதிகள். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் தொடர்பான வழிப்புணர்வு , சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, கள்ளச்சாராயம் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் , பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசால் வழங்கப்படும் நலதிட்ட உதவிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மேலும் கல்வியின் முக்கியத்துவங்கள் மற்றும் அதன் சிறப்பியல்புகள் பற்றியும் கட்டாயம் கல்வி கற்றால் தான் சிறந்த மனிதனாகவும் சிறப்பன ஆற்றல்மிக்கவராகவும், நல்லெண்ணம் நற்செயல் நற்பண்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் ஒரு நபராக இருக்க முடியும் என்று கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் தீண்டாமை, சாதிய பாகுபாடுகள், இரட்டை குவளை முறை, மற்றும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஆகியவைகளே இல்லாத மனிதாபிமானமிக்க சமூகத்தை உருவாக்க வேண்டுமெனில் மாணவர்களாகிய நீங்கள் தான் அதற்கான முழு முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்த சமூகத்தில் அனைவரும் சமம் என்பதையும் மாணவ மாணவிகளிடையே கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் பெண்கள் கல்வி கற்பதன் அவசியம் மற்றும் பெண்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதற்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதையும் கேட்டுக் கொண்டு மாணவிகளிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து கலந்துரையாடினார்கள்.

Tags:    

Similar News