மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம்.

இராசிபுரத்தில் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேச தலைவர்கள் வேடமணிந்து ‌ மகரிஷி தனியார் பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

Update: 2024-01-27 06:17 GMT

இராசிபுரத்தில் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு தேச தலைவர்கள் வேடமணிந்து ‌ மகரிஷி தனியார் பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மகரிஷி வித்யா மந்திரி பள்ளியின் சார்பாக ராசிபுரம் சேலம் சாலை பகுதியிலிருந்து பள்ளி நிர்வாகிகள் முன்னிலையில் 500.க்கும் மேற்பட்டோர் 75 ஆவது குடியரசு தின விழாவை கொண்டாடும் வகையில் தேச தலைவர்கள், பாரதமாதா போன்ற வேடமடைந்து மேலும் தேசப்பற்று விழிப்புணர்வுகள் அடங்கிய பதாகைகள் ஏந்தி முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர்.

இந்த பேரணியில் தேசப்பற்று தலைவர்களின் வரலாற்றை எடுத்து கூறும் விதமாக மாணவ மாணவிகள் முழக்கங்கள் இட்டு கடைவீதி, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Tags:    

Similar News