100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி !
100% அனைவரும் வாக்களிப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழு சார்பில் விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது.
Update: 2024-04-08 09:18 GMT
திருப்பூரில் பாராளுமன்றம் பொதுத்தேர்தல்- 2024 நடைபெறுவதை முன்னிட்டு 100% அனைவரும் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் மகளிர் சுய உதவி குழுக்கள் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை உதவி ஆட்சியர் (பயிற்சி) ஹிந்தியா விஜயன் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மலர்விழி, மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் ஆகியோர் உள்ளனர்.