அயோத்தி கும்பாபிஷேகம்: சங்ககிரி கோதண்டராமர் கோவிலில் சிறப்பு பூஜை

அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சங்ககிரி கோதண்டராமர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2024-01-22 15:18 GMT

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர், சீதா, லஷ்சுமணன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ஸ்ரீ பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதையொட்டி சங்ககிரி பாஜக சார்பில் ஸ்ரீ கோதண்டராமர், சீதா, லஷ்சுமணன் சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

இதே போல் ஸ்ரீ கோதண்டராமர், சீதா, லஷ்சுமணன் உற்சவ மூர்த்திகளுக்கும் சிபு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச்சென்றனர். பக்தர்கள் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், சுண்டல் வழங்கப்பட்டது. பாஜக மண்டலத்தலைவர் முருகேசன் தலைமையிலான நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News