அயோத்தி கும்பாபிஷேகம்; ஈரோடு கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஈரோடு கோவில்களில் பாஜ., சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Update: 2024-01-22 11:58 GMT
அயோத்தி ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. குழந்தை ராமர் சிலையை பாரத பிரதமர் நரேந்திர மோடி பிராண பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தினை சிறப்பான தினமாக கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பிரார்த்தனை நடைபெற்றது. அதன்படி மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி தலைமையிலான பா.ஜ.க வினர் ஈரோடு, கோட்டை பெருமாள் கோவிலில் "ஸ்ரீ ராம ஜெயம்" பஜனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பெரியார் நகர், மாணிக்க விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமி தரிசனம் செய்தார்கள்.
Tags:    

Similar News