களக்காட்டில் அயோத்திதாச பண்டிதருக்கு மரியாதை

அயோத்தி தாசர் பண்டிதர் நினைவு தினத்தையொட்டி புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

Update: 2024-05-05 07:00 GMT

புரட்சி பாரதம் கட்சியினர்

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் இன்று (மே 5) அயோத்திதாச பண்டிதரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட தலைவர் முஹம்மது காஸிர், மாவட்டம் மகளிர் அணி தலைவி கனகரணி உள்ளிட்ட புரட்சி பாரதம் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News