அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் பால்குட ஊர்வலம்
குமாரசாமிபேட்டை அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோவிலில் நடைபெற்ற பால்குடம் ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-09 12:42 GMT
பால்குடம் எடுத்த பக்தர்கள்
தருமபுரி குமாரசாமிபேட்டை அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோவிலில் மயானக்கொள்ளை பெருவிழா 5 நாட்கள் நடைபெறுகிறது 4ம் நாளான இன்று மேல தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக பால்குடம் ஊர்வலமாக சென்று அங்காளபரமேஸ்வரி ஆலயம் சென்றடைந்தது பின்னர் அங்காள பரமேஸ்வரிக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்த பின் அலங்கரிக்கப்பட்டு அங்காள பரமேஸ்வரி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அங்காள பரமேஸ்வரி அருள்பெற்றனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.