திருட்டில் ஈடுபட்ட பெங்களூர் வாலிபர் கைது - போலீசார் விசாரணை!

நத்தம் காலனியில் உறவினர் வீட்டில் திருடிய பெங்களூர் வாலிபரை கந்திலி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-07-05 03:38 GMT

கைது செய்யப்பட்ட அப்பு 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திர்க்கு உட்பட்ட நத்தம் பகுதியை சேர்ந்த அருணாசலம் மகன் வினோத். இவர் பெங்களூரில் கொத்தனார் வேலை செய்து வருகிறார் நேற்று பெங்களூரில் இருந்து அவரது உறவினர் முனியப்பன் மகன் அப்புவை வினோத் சொந்த ஊரான நத்தம் காலனிக்கு அழைத்து வந்துள்ளார் இன் நிலையில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த ஒரு சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணாமல் போய் உள்ளது, இதை குறித்து வினோத் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் கந்திலி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வினோத்தின் உறவினரான அப்புவை விசாரணை மேற்கொண்டத்தில் அப்பு திருடியது தெரியவந்தது. அப்புவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News