தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது

திருச்சி மாவட்டம் ,மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-12 08:08 GMT

லாட்டரி விற்பனை

திருச்சி மாவட்டம் ,மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி பகுதியில் மண்ணச்சநல்லூர் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பைஞ்சீலி கடைவீதி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் திருச்சி பிள்ளைமார் நகரைச் சேர்ந்த 54 வயதான ஜெகதீசன் என தெரியவந்தது .பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டு விற்ற ரூ.300 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News