உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்குதல்: வீடியோ வைரல்

பாறையடியில் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்குதல் நடத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

Update: 2024-06-18 15:17 GMT
உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்குதல் வீடியோ பரபரப்பு ஏற்படுத்தியது

தென்காசி மாவட்டம் பாறையடி தெருவை சேர்ந்த ஜமால் மைதீன் என்பவர், அப்பகுதியில் உள்ள சில இளைஞர்களை கண்டித்ததாகக் கூறப்படுகின்றது. இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள், உருட்டு கட்டையால் மைதீனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது, இதனால் தென்காசி போலீசார் முகமது உசேன், முகமது இஸ்மாயில், இம்ரான் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News