கறி கடைக்காரர் மீது பீர்பாட்டிலால் தாக்குதல்

சேலத்தில் முன்விரோதம் காரணமாக கறி கடைக்காரர் மீது பீர்பாட்டிலால் தாக்குதல் நடத்திய தந்தை மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-03-04 13:38 GMT

கத்திகுத்து

சேலம், கன்னங்குறிச்சி கோம்பைப்பட்டியை சேர்ந்தவர் முருகன்(48). இவர் அந்த பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று மதியம் 3 மணியளவில் கடையில் இருந்தபோது, அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த வேணுகோபால் மற்றும் அவரது மகன் கோகுல் ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் முன்விரோதம் காரணமாக முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர்.

அப்போது, திடீரென வேணுகோபால் பீர்பாட்டிலை எடுத்து முருகனின் தலையில் தாக்கினார். இதில் வலது கண் மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது பற்றி கன்னங்குறிச்சி போலீஸ் எஸ்ஐ துர்கா தேவி விசாரணை நடத்தி கறிக்கடைக்காரர் முருகனை தாக்கிய வேணுகோபால், கோகுல் மீது கொலை மிரட்டல் உள்பட 3பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார். தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News