போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை மருத்துவருக்கு 'சிறந்த மருத்துவர்' விருது

போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் நாராயணசாமிக்கு சிறந்த மருத்துவருக்கான விருதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

Update: 2024-07-02 05:08 GMT

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த டாக்டர் நாராயணசாமி, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2023 - 24-ஆம் ஆண்டு சிறந்த மருத்துவதற்கான விருது சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இவர் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவராக18 ஆண்டுகள் பணிபுரிந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார்.

தற்போது இரண்டு ஆண்டுகளாக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலராக பொறுப்பேற்று 50க்கும் மேற்பட்ட அறுவை அறுவை சிகிச்சைகளை செய்து தமிழ்நாட்டிலே 10 இடங்களை பிடித்துள்ள மருத்துவமனையில் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையும் ஒன்றாக தரம் உயர்த்தினார். இதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், டாக்டர் நாராயணசாமிக்கு சிறந்த மருத்துவருக்கான விருதினை வழங்கி பாராட்டினார்.

Tags:    

Similar News