மே மாதத்திற்கான சிறந்த பணியாளர் தேர்வு

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மே மாதத்திற்கான சிறந்த பணியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-06-01 05:26 GMT

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மே மாதத்திற்கான சிறந்த பணியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மே மாதத்திற்கான சிறந்த பணியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திண்டுக்கல் மாநகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களின் சேவையை ஊக்குவிக்கும் விதமாக மாதந்தோறும் சிறந்த பணியாளரை தேர்வு செய்யும் புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதன் அடிப்படையில் மே மாதத்திற்கான சிறந்த பணியாளராக மாநகராட்சி 1-வது பொது சுகாதார பிரிவை சேர்ந்த கந்தசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனால் நினைவு பரிசு வழங்கி பொன்னாடை அணிந்து கெளரவிக்கப்பட்டது.மேலும் ஒவ்வொரு மாதமும் ஒரு தூய்மை பணியாளரை தேர்வு செய்து சிறந்த தூய்மை பணியாளருக்கான பரிசும்,பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தூய்மை பணியாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News