பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க நிர்வாகிகள் தேர்வு

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

Update: 2024-03-20 05:37 GMT

அரிமா சங்க நிர்வாகிகள் தேர்வு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆலமரம் வட்டாரத் தலைவர் கே. ஆர். பி. இளங்கோ தலைமை தாங்கினார். செயலாளர் சசி ஞான சேகரன், முன்னாள் செயலாளர் ஆர். கலைச் செல்வன் மற்றும் உறுப்பினர் ஆர். அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் பொன் அறிவழகன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் ஆசிரியர் பி. திருமலைக்கொழுந்து, டி. சுரேஷ், ஆர். பாண்டிய ராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். 2024-2225 ஆண்டின் புதிய தலைவராக ஆனந்த், செயலாளராக கே. பி. தங்கராஜ், பொருளாளராக ஜேக்கப் சுமன், ஆகியோரை அரிமா சங்க நிர்வாகி முனைவர் த. அருணாச்சலம் தேர்வு செய்தார். நிகழ்ச்சியின் முடிவில் பொருளாளர் டாக்டர் கே. எஸ். சினேகா பாரதி நன்றி கூனார்.
Tags:    

Similar News