திருமண மண்டபம் கட்ட பூமி பூஜை

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே கோவிலில் புதிய திருமண மண்டபம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

Update: 2024-02-18 11:49 GMT
பூமி பூஜை

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே பெருவளூரில் உள்ள கோகிலாம்பாள் சமேத கோட்டீஸ்வரர் கோவிலில் திருமண மண்டபம் கட்டித்தரு மாறு அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று ரூ.1 கோடியே 97 லட்சத்தில் திருமண மண்டபம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதில் வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் செல்வராஜ், இந்துசமய கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பாபு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News