நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூஜை

கள்ளக்குறிச்சியில் நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

Update: 2024-02-28 04:58 GMT

நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூஜை

மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுபட்டு காலனி பகுதியில் தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் நிதி ஒதுக்கீட்டில் 27.5 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜையினை சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைச் சேர்மன் அஞ்சலை கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா தாஸ், குமாரசாமி, மணி, வெங்கடேசன், வேணுகோபால், சிவக்குமார், இளவரசன், இளையராஜா, தட்சிணாமூர்த்தி, ராம்ராஜ், ஆனந்த், விஜயகுமார், பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News