புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை !

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

Update: 2024-03-13 10:18 GMT

பூமி பூஜை

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 6.98 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 90.50 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை விழாவில், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்,திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசியல் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News