பயணியர் நிழற்குடை கட்ட அம்மையகரத்தில் பூமிபூஜை

கள்ளகுறிச்சி மாவட்டம், அம்மையகரத்தில் பயணியர் நிழற்குடை கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

Update: 2024-02-28 02:06 GMT

பூமி பூஜை

அம்மையகரத்தில் பயணியர் நிழற்குடை கட்ட பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு, பி.டி.ஓ., ஜெகநாதன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் சிவஞானம் வரவேற்றார். நிகழ்ச்சியில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அம்மையகரத்தில் மின்விசிறிகளுடன் கூடிய புதிய பயணியர் நிழற்குடை கட்ட ஒன்றிய பொதுநிதியில் இருந்து 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடர்ந்து இப்பணிக்கான பூமிபூஜை நேற்று நடந்தது. ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி அடிக்கல்நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஊராட்சி செயலாளர் விஜயகாந்த், தி.மு.க., கிளைச் செயலாளர்கள் மாயகண்ணன், கவிதன், பரதன், பெரியசாமி, துரைமுருகன், தனசேகர், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News