வந்தவாசியில் ஆதிதிராவிட நல மாணவியர் விடுதி கட்ட பூமி பூஜை

வந்தவாசி நகரில் ₹2.78 கோடியில் ஆதிதிராவிட நல மாணவியர் விடுதி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது

Update: 2024-01-28 15:55 GMT

அடிக்கல் நாட்டப்பட்டது 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் ஆதிதிராவிட நல மாணவியர் விடுதி புதிய கட்டிடத்திற்கான பூமிபூஜையில் எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். வந்தவாசி டவுன் 3வது வார்டு பகுதியில் ஆதிதிரா விட நல மாணவ விடுதி புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை சங்க இயக்குனர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் ஜலால் துணை தலைவர் சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர் தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் அன்பரசு வரவேற்றார். ₹2.78 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் எம்எல்ஏ எஸ். அம்பேத்குமார் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியினை தொடக்கி வைத்து பேசினார்.

இதில் கவுன்சிலர்கள் உட்பட கட்சிநிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News