மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை

சேசம்பட்டியான் கொட்டாய் கிராமத்தில் 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடைப்பெற்ற பூமிபூஜையில் எம்எல்ஏ பங்கேற்றார்.

Update: 2024-03-08 01:22 GMT

பூமி பூஜை

தருமபுரி மாவட்டம், சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி வட்டம் மானியதனஅள்ளி ஊராட்சி சேசம்பட்டியான் கொட்டாய் கிராமத்தில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.6,00,000 இலட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி. வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு செய்து அடிக்கல் நாட்டப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் பாமக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

Tags:    

Similar News