அரசுபள்ளி வகுப்பறை கட்ட பூமிபூஜை

திருப்பூர் சாமுண்டிபுரம், செல்லம்மாள் காலனி அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிடங்களுக்கு 1.80 கோடி மதிப்பில் பூமி பூஜை நடைபெற்றது.

Update: 2024-06-10 01:53 GMT

பூமிபூஜை

செல்லம்மாள்காலனி அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிடங்களுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் பூமி பூஜை! திருப்பூர் மாநகராட்சி 1&க்கு உட்பட்ட 24-வது வார்டு சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், தமிழக அரசின் மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.1.80 கோடி மதிப்பில் தரைத்தளத்தில் 5 வகுப்பறைகளும், முதல் தளத்தில் 5 வகுப்பறைகளும் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது.இதற்கு ம.தி.மு.க. மாநகர மாவட்ட செயலாளரும், கவுன்சிலருமான நாகராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரி சரவணக்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News