இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-27 06:04 GMT

விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல் அருகே தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சரவணன் துவக்கி வைத்தார். தாசில்தார் சுகந்தி, தேர்தல் துணை வட்டாட்சியர் டேனியல் பிரேம்குமார், மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரபாண்டி உள்ளிட்ட வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவு துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். நத்தம் தொகுதி முழுவதும் இந்த பேரணி நடந்தது.
Tags:    

Similar News