கோவில் திருவிழாவில் இருசக்கர வாகனம் திருட்டு
சோமனஅள்ளி அக்குமாரியம்மன் கோவில் திருவிழாவில் இருசக்கர வாகனம் திருட்டுப் போன சம்பவத்தை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Update: 2024-05-18 04:36 GMT
சோமனஅள்ளி அக்குமாரியம்மன் கோவில் திருவிழாவில் இருசக்கர வாகனம் திருட்டுப் போன சம்பவத்தை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி அடுத்த பி.குளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மாலை பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சோமன அள்ளியில் உள்ள அக்குமாரியம்மன் கோவில் திருவிழாவை காண இருசக்கர வாகனத்தில் சென்றார். பின்னர் அவர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் சென்றார். இதையடுத்து அவர் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் பாலக்கோடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.