கந்திலி அருகே பைக்குகள் மோதல்: ஒருவர் பலி

கந்திலி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர்உயிரிழந்தார்.

Update: 2024-05-23 14:16 GMT

பலியானவர்

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த தெலுங்கு மட்றப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் கார்த்திகேயன் வயது 19 இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் கந்திலி பகுதிக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக கந்திலியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

   அப்போது திருப்பத்தூர் நகரம், தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் வயது 48 என்பவர் திருப்பத்தூர் பகுதியில் இருந்து கந்திலி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கரியம்பட்டி பகுதியில் சென்ற போது இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தாமோதரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கல்லூரி மாணவர் கார்த்திகேயன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் கார்த்திகேயனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கந்திலி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News