பைக்குகள் மோதல்- ஒருவர் உயிரிழப்பு

கரூர் அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்.

Update: 2024-03-01 15:52 GMT
அரசு மருத்துவமனை

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், காந்தி நகர், பாப்பாயி அம்பாள் காம்ப்ளக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் வயது 54. இவர் பிப்ரவரி 29ஆம் தேதி மதியம் இரண்டு மணி அளவில், வேலாயுதம்பாளையத்தில் இருந்து நொய்யல் செல்லும் சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் மலைவீதி ரவுண்டானா பகுதியில் உள்ள ராசப்பா டீ ஸ்டால் அருகே சென்று கொண்டிருந்தபோது, கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, காயத்ரி நகர் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் வயது 20 என்ற இளைஞர் ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் ஆனந்தன் ஓட்டிச் சென்ற டூவீலரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்த ஆனந்தனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால்,

உடனடியாக அவரை மீட்டு, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த ஆனந்தன் மனைவி சித்ரா வயது 49 என்பவர்,

அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளைஞன் லோகேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News