பிரியாணி கடைக்காரர் தற்கொலை

சேலத்தில் பிரியாணி கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-07-03 04:38 GMT

தற்கொலை 

சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளரிவெள்ளி வேட்டுவப்பட்டியைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 48). அஸ்தம்பட்டியில் பிரியாணி கடை நடத்தி வந்தார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதற்காக பல இடங்களில் கடன் வாங்கி செலுத்த முடியாததால் மன உளைச்சல், விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

இதில் மனம் உடைந்த அன்பழகன் விஷம் குடித்து விட்டு கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலம் அருகே மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News