துண்டுபிரசுரங்களை வழங்கி பாஜகவினர் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு!

எட்டையபுரத்தில் பாஜகவினர் தப்பு தாளங்களுடன் துண்டு பிரசுரங்களை வழங்கி இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-17 11:45 GMT

எட்டையபுரத்தில் பாஜகவினர் தப்பு தாளங்களுடன் துண்டு பிரசுரங்களை வழங்கி இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி பாஜக கூட்டணி (தமாகா) வேட்பாளர் விஜய் சீலனுக்கு எட்டையபுரத்தில் பாஜக-வினர் தப்பு தாளங்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரச்சாரத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளைக் கூறியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் எட்டையபுரம் பஜார் பகுதியில் பாஜக நிர்வாகிகள் திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசி... பாஜகவின் சாதனைகள் பொதுமக்களுடன் எடுத்துக் கூறி, மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வரவேண்டும் என்றால் பாஜக கூட்டணி வேட்பாளர் விஜய சிலனுக்கு "சைக்கிள்" சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News