பொன்னமராவதி- ஏம்பலுக்கு பஸ் இயக்க பாஜக கோரிக்கை

தென்காசி மாவட்டம், ஏம்பலுக்கு பேருந்து வசதி செய்து தர பாஜக மாவட்ட துணைத்தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Update: 2024-02-16 09:18 GMT

பேருந்து இயக்க கோரிக்கை 

திருமயம் பாஜக மாவட்ட துணை தலைவர் முருகேசன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியதாவது, அரிமளம் ஒன்றியத்தை சேர்ந்த ஏம்பலில் எட்டாயிரம் பேர் வசிக்கின்றனர். இதை சுற்றி குருங்களூர், மதகம், திருவாக்குடி உட்பட 36 கிராமங்கள் உள்ளன மாவட்ட எல்லையில் இருப்பதால் இப்பகுதி மக்கள் போதிய போக்குவரத்து வசதியின்றி தவிக்கின்றனர்.

இரவு 10 மணிக்கு மேல் அதிகாலை 5 மணி வரை பஸ் இல்லாததால் அவசரத்துக்கு வெளியூர் செல்ல முடியாத நிலை உள்ளது. விபத்து, உடல்நல குறைவு, விஷ பூச்சிக்கடி ஆகியவற்றால் பாதிக்கப்படுவோர் வாடகை கார் அல்லது ஆட்டோவில் புதுகை அல்லது காரைக்குடி செல்ல வேண்டியுள்ளது.

இதற்கு அதிகமாக செலவு ஏற்படுகிறது. இதனால் ஏழை மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். கே. புதுப்பட்டி, திருமயம் ஆகிய ஊர்களில் 24 மணி நேரமும் பஸ் போக்குவரத்து உள்ளது. பொன்னமராவதியில் மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், திருமயத்தில் கல்வி நிறுவனங்கள் உள்ளன.

ராங்கியத்தில் காய்கறிகள், பழங்கள், உணவு தானியங்கள் பெரும் அளவு உற்பத்தி ஆகின்றன. இதே போல் அரிமளம், தாஞ்சூர், கழனிவாசல் பகுதிகளில் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன.

மஎனவே பகுதி மக்கள் நலன் கருதி பொன்னமராவதி இல் இருந்து ஏம்பலுக்கு பஸ் இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News