தமிழக கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினர் கைது

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-06-22 13:51 GMT

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக தமிழக அரசை கண்டித்து பொள்ளாச்சி நகர தலைவர் பரமகுரு தலைமையில் போராட்டம் நடத்த முயன்ற பாஜகவினர் கைது.. பொள்ளாச்சி..ஜூன்.22 கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து 50.க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பாஜக சார்பில் தமிழகத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

 இதன் ஒரு பகுதியாக கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர் ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி அளிக்காமல் மறுப்பு தெரிவித்து இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பொள்ளாச்சி நகர தலைவர் பரமகுரு தலைமையில் பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்ல இருந்த பாஜகவினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.. அப்போது பாஜக பொள்ளாச்சி நகரத் தலைவர் பரமக்குழு தலைமையில் பாஜகவினர் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் பாஜகவினரை ஆர்ப்பாட்டம் செய்ய விடாமல் தடுத்து 14 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்..

Tags:    

Similar News