ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது

மயிலடுதுறையில் கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் 52 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-06-23 05:52 GMT

பாஜகவினர் கைது 

மயிலாடுதுறை முத்து வக்கீல் சாலையில் கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த பாஜகவினர் முயற்சித்தனர்.   ஏற்கனவே போராட்டம் நடத்த போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டது . அங்கு வந்த பாஜகவினரை ஒருவர்பின் ஒருவராக போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்க வரதராஜன், நகர தலைவர் செய்து தனியார் திருமண வினோத் மற்றும்  2 பெண்கள் உள்பட 52 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News