தூத்துக்குடி வரும் பிரதமருக்கு  கருப்பு கொடி

இலங்கை சிறையில் உள்ள மூன்று மீனவர்களை மீட்க தவறிய மத்திய அரசை கண்டித்து , தூத்துக்குடி வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்கின்றனர்.

Update: 2024-02-27 01:20 GMT
நாகர்கோவிலில் காங்கிரஸ் சார்பில் பேட்டி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமை வகித்தார்.இந்த கூட்டத்தில் இலங்கை சிறையில் உள்ள மூன்று மீனவர்களை மீட்க தவறிய மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடி வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்து கொள்ள போவதாக தீர்மானிக்கப்பட்டது.   

தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், -  மத்திய அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான விரோத போக்கை கண்டித்து சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அகில இந்திய மீனவர் சங்க தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் முன்னிலையில்  இராமேஸ்வரம் பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளதாகவும், இந்த போராட்டத்தில்   குமரி காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்ள கூறினர். . கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News