வெடி விபத்து - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கல்குவாரி தரப்பில் இழப்பீடு

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் பகுதியில் நடந்த கல்குவாரி வெடி விபத்தில் உயிர் இறந்தவர்களின் குடும்பத்திற்கு கல் குவாரி தரப்பில் ரூ.12 லட்சம் வழங்கப்பட்டது. இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள் பெற்று சென்றனர்.

Update: 2024-05-03 05:21 GMT

இழப்பீடு வழங்கல் 

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே கீழ உப்பிலி குண்டு பகுதியில் தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் காலை நடந்த வெடி விபத்தில் பெரியதுரை,  கந்தசாமி ,குருசாமி ஆகிய மூவர் உடல் சிதறி உயிர் இழந்தனர். இந்த சம்பவம் பெறும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில் குவாரியை மூடக்கோரி அந்த கிராமத்தை சுற்றி உள்ள பொதுமக்கள் அந்த தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர் அவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

உடல்கள் வெடித்து சிதறியதால் ஆங்காங்கே உள்ள உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நேற்று மாலை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது இதை அடுத்து உடற்கூறு ஆய்வு இன்று காலை நடத்தப்படும் என அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு குவாரி தரப்பில் உயிர் இழந்த குடும்பத்தினரிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் உயிர் இறந்தவரின் குடும்பத்திற்கு தலா 12 லட்சம் வழங்கப்படும் என குவாரி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டு அதைத் தொடர்ந்து 50,000 ரொக்கமும் 11 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டதை அடுத்து நேற்று நள்ளிரவில் சுமார் ஒரு மணி அளவில் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டு உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை எடுத்து அவசர அவசரமாக இறந்தவரின் உடல்கள் இந்த அதிகாலையே தகனம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News