இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் 

தஞ்சாவூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

Update: 2024-07-01 07:21 GMT
கள்ளச்சாராயத்திற்கு எதிராக போராடி உயிர் நீத்த கடலூர் தியாகிகள் குமார்-ஆனந்தன் ஆகியோரது 25-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்ததானக் கழகம் மற்றும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து, ஞாயிற்றுக்கிழமை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாமை நடத்தினர்.  ரத்ததான முகாமிற்கு, வாலிபர் மாவட்டத் தலைவர் க.அருளரசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா, மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வன், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் உ.சரவணன், பூதலூர் தெற்கு ஒன்றிய தலைவர் எல்.முருகானந்தம் ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.கரிகாலன், தஞ்சை மாநகரக்குழு உறுப்பினர்கள் எம்.நாகராஜன், எம்.ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
Tags:    

Similar News