ரத்த தான முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர்
வாலாஜா அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமை ஆட்சியர் வளர்மதி தொடங்கி வைத்தார்.
Update: 2024-06-14 16:49 GMT
ரத்த தான முகாம்
ராணிப்பேட்டை மாவட்ட தலைமை மருத்துவமனையான வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது. அதனை மாவட்ட ஆட்சியர் வளர்மதி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். அப்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷா நந்தினி மற்றும் மருத்துவ அலுவலர் கீர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.