லோயர் கேம்ப்பில் இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடல் நல்லடக்கம்

லோயர் கேம்ப்பில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடலை நல்லடக்கம் தீவிர ஏற்பாடுகள் நடக்கின்றன.

Update: 2024-01-27 03:34 GMT

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைபுரத்தை சொந்த ஊராக கொண்டு சினிமா துறையில் இசை மற்றும் பாடல்களை ஒளிபதிவு செய்து மிகவும் பிரபலமான இளையராஜா அவரது மகள் பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் மரணம் அடைந்தார். அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் இளையராஜாவிற்கு சொந்தமான பண்ணை வீட்டில் உடலை நல்லடக்கம் செய்வதற்காக பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட நல்லடக்க பணிகளை தொழிலாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

இதற்கு முன்பாக அவரது சொந்த பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரே நல்லடக்கம் செய்து மணிமண்டபங்களை கட்டி உள்ளனர். தற்பொழுது மூன்றாவதாக தனது மகளின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு இசையமைப்பாளர் இளையராஜா அங்கு முன்னேற்பாட்டு பணிகளை செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News