வாசவி இண்டர்நேஷனல் சங்கங்களில் சார்பில் புத்தகம் வெளியீடு

வாசவி இண்டர்நேஷனல் சங்கங்களில் சார்பில் உறுப்பினர்களுக்கான சத்யா யுனிவெர்ஸ் புத்தகம் வெளியிடப்பட்டது.

Update: 2024-07-02 07:45 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வாசவி இண்டர்நேஷனல் சங்கங்களில் மாவட்டம் V501A 2024ன் "சத்யா யுனிவெர்ஸ்" . இது ஒவ்வொரு உறுப்பினர்களின் பெட்டகம். வாசவி கிளப் இராசிபுரம் மற்றும் வாசவி கிளப் வனிதா இராசிபுரம் சங்கம் நடத்திய ஆளுநரின் அலுவல் கூட்டத்தில் கேபினட் செயலாளர் ரமேஷ், கேபினட் பொருளாளர் சுரேஷ், சத்யா யுனிவர்ஸ் ப்ராஜெக்ட் தலைவர் வெங்கடேஸ்வர குப்தா , மற்றும் பிராந்திய தலைவி சுப்ரிதா , மண்டல தலைவி  லட்சுமி பிரியா  முன்னிலையில், V501A மாவட்ட ஆளுநர் சத்ய நாராயணன்  தலைமையில்  புத்தகம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாசவி கிளப் இராசிபுரம் மற்றும் வாசவி கிளப் வனிதா இராசிபுரம் கிளப் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மேலும் பல நலத்திட்ட உதவிகள் வழங்கியதை எடுத்து கூறி பேசினர். மேலும் மாணவிகளின் பரதநாட்டியம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றது.
Tags:    

Similar News