திண்டிவனம் அருகே பஸ் மோதி போர்வெல் லாரி மேலாளர் பலி!

திண்டிவனம் அருகே பஸ் மோதி போர்வெல் லாரி மேலாளர் பலியனார்.

Update: 2024-04-10 09:58 GMT

லாரி மேலாளர் பலி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பாங்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர்(வயது 38). போர்வெல் லாரி மேலாளரான இவர் பாங்கொளத்தூருக்கு சென்று கொண்டிருந்தார்.

கோனேரிக்குப்பத்தில் சென்றபோது சென்னையில் இருந்து செஞ்சி நோக்கி வந்த அரசு பஸ், எதிர்பாராதவிதமாக ஸ்ரீதர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஸ்ரீதரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே ஸ்ரீதர் பரிதாபமாக இறந்தார். விபத்தில் பலியான ஸ்ரீதருக்கு செல்வி என்ற மனைவியும், சங்க ரன்(15), சந்துரு(13) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News