சிறுமியை கடத்தி திருமணம் போக்சோவில் வாலிபர் கைது!

சிறுமியை கடத்தி திருமணம் போக்சோவில் வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2024-04-16 11:29 GMT

காவல்துறை விசாரணை


கீரனுார் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 2ம் தேதி வேலைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் கீரனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் குட்டத்து ஆவாரம்பட்டி பகுதியை சேர்ந்த ஜக்குலின் ராபர்ட் ஸ்டீபன் மகன் லாரன்ஸ் (19) கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திண்டுக்கல் சென்று இருவரையும் மீட்டு கீரனுார் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரித்தபோது, சமூக வலைத்தளம் மூலமாக இருவ ருக்கும் பழக்கம் ஏற்பட்டதும், சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் லாரன்சை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News