சேலத்தில் 13 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் - போலீசார் போக்சோ வழக்குப்பதிவு !

சேலத்தில் குழந்தை திருமணம் செய்த அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2024-07-13 07:23 GMT

போக்சோ சட்டம்

சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமிக்கும், தர்மபுரியை சேர்ந்த 21 வயதுடைய வாலிபருக்கும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த குழந்தை திருமணம் குறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து குழந்தை திருமணம் செய்த அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த திருமணம் நடத்தி வைத்த இரு வீட்டார்களை சேர்ந்த 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News