உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி அடுத்த புது உச்சிமேடு அருகேயுள்ள முனியப்பன் கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடு போன நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.

Update: 2024-06-04 05:32 GMT

கள்ளக்குறிச்சி அடுத்த புது உச்சிமேடு அருகேயுள்ள முனியப்பன் கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடு போன நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.  

கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேட்டைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் ராயப்பன், 57; இவர், பட்டி கிராமத்தில் உள்ள முனியப்பன் கோவில் பூசாரியாக உள்ளார். கடந்த 2ம் தேதி காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்குச் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News