குடிநீர் குழாயில் உடைப்பு: உடனடியாக சீரமைப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி சந்தைப்பேட்டையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியே சென்றது.

Update: 2024-03-30 14:27 GMT

வீணாகும் குடிநீர் 

திருச்சி மாவட்டம் லால்குடி கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து பொதுமக்களின் தேவைக்காக குழாய் மூலம் லால்குடி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் லால்குடி சந்தப்பேட்டை பகுதியில் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது இதை கவனித்த அப்பகுதி மக்கள் லால்குடி நகராட்சி் அலுவலகத்திற்க்கும்,சமூக வலைதளம் மூலம் தகவல் தெரிவித்தனர்.இதையறிந்த நகராட்சி ஆணையர் குமார் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் உடனடியாக குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாக செல்வதை தடுத்தனர் .உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கும் உதவிய லால்குடி நகராட்சி ஆணையருக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

Tags:    

Similar News