கோவிலில் சுவாமி சிலைகள் உடைப்பு; காவல் நிலையம் முற்றுகை

சாலைப்புதூர் கோவிலில் சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்துள்ள நிலையில், உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2024-06-27 04:37 GMT

சாலைப்புதூர் கோவிலில் சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்துள்ள நிலையில், உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.  

திருநெல்வேலி மாவட்டம் சாலைப்புதூர் கோவிலில் சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதனை அறிந்த சாலைப்புதூர் பகுதி மக்கள் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி தேவர்குளம் காவல் நிலையத்தை நேற்று (ஜூன் 26) முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News