வீட்டின் பூட்டை உடைத்து பணம்,நகைகள் கொள்ளை-மர்ம நபர்கள் கைவரிசை!

வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகைகளை கொள்ளயடித்த மர்ம நபர்கள். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-02-08 06:32 GMT

வீட்டின் பூட்டை உடைத்து பணம்,நகைகள் கொள்ளை-மர்ம நபர்கள் கைவரிசை!

கோவை:மருதமலை சாலையில் உள்ள தக்‌ஷா சாரஸ் அடுக்குமாடி குடியிருப்பு பின்புறம் உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் வசித்து வருபவர் வனஜா(52).குழந்தைகள் காப்பாளராக பணியாற்றி வரும் இவரும் இவரது மகளும் காலை 8.30 மணியளவில் வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மாலை ஐந்து மணியளவில் வீட்டின் அருகில் வசிக்கும் காந்தி என்பவர் வனஜாவை அழைத்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் அளித்துள்ளார்.இதனையடுத்து வீட்டிற்கு விரைந்த வனஜா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கபட்டிருந்த நகை மற்றும் 11,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து வனஜா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள வடவள்ளி போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News