வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு - தாய்,மகன் உட்பட 3 பேர் கைது

பல்லடம் அருகே சென்னிமலைபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய தாய், மகன் உட்பட 3 பேரை பல்லடம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-02 07:01 GMT

பைல் படம் 

பல்லடம் அருகே உள்ள சென்னிமலை பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 60).இவரது மனைவி லட்சும6(50) இவரது மகன் பிரேம்குமார் (27). சம்பவத்தன்று வழக்கம் போல் 3 பேரும் வேலைக்கு சென்று விட்டனர். மதிய உணவு இடைவேளையில் பிரவீன் குமார் வீட்டிற்கு சாப்பிட வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 20ஆயிரம், 5 பவுன் நகை ஆகியவை திருட்டுப்போனது தெரிய வந்தது. இதேபோல் அதே பகுதியில் உள்ள நாச்சாள் என்பவர் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு ரூ. 20 ஆயிரம் திருடப்பட்டது. இந்த திருட்டுகள் குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் கள்ளக்குறிச்சி சங்கராபுரத்தை சேர்ந்த முகமது ரபிக் என்பவர் மகன் ரசித் (23) என்பதும் சுப்பிரமணியம் வீட்டிலும், நாச்சாள் வீட்டிலும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் ரவீதா (41) மற்றும் இளம் பெண் ஒருவர் என மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 41/2 பவுன் நகைகள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News