கோவிலின் பூட்டை உடைத்து சாமியின் தாலி சங்கிலி திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயில் பூட்டை உடைத்து சாமி கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 5 பவுன் தாலி சங்கிலியை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்..

Update: 2024-07-03 04:11 GMT
உடைக்கப்பட்ட பூட்டுகள் 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாப்பட்டி எஸ். கொடிக்குளம் பகுதியில் உள்ளது ஸ்ரீ மாதா அங்காள ஈஸ்வரி கோயில். இந்த கோயிலில் நேற்று காலை வழக்கம் போல பூசாரி கோயிலை திறந்து பார்த்தபோது அங்கிருந்த கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்த போது சாமி கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க தாலி சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து கூமாபட்டி காவல் நிலையத்தில் கோயில் பூசாரி சின்னையாசாமி கொடுத்த புகாரின் பேரில் கூமாபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாமி கழுத்தில் போடப்பட்டிருந 5 புவுன் தாலிச் சங்கிலி திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News