பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் - நகராட்சி சர்வேயர், கணினி உதவியாளர் கைது

திருவத்திபுரம் நகராட்சியில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் தற்காலிக கணினி உதவியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2024-03-13 03:24 GMT

சர்வேயர் கன்னிவேல் 

செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பட்டா மாற்றம் மனு கொடுத்த ஊதுபத்தி வியாபாரி வெங்கடேசன்(70) என்பவரிடம் பட்டா மாற்றம் செய்ய 40 ஆயிரம் லஞ்சம் கேட்டு 20 ஆயிரம் நகர சர்வேயர் கன்னிவேல் தன்னுடைய கணினி உதவியாளர் மாதவனிடம் கொடுக்க சொல்லியுள்ளார் . ரூ.20 ஆயிரம் ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சம் வாங்கியதாக சர்வேயர் கன்னிவேல், கணினி உதவியாளர் மாதவன் இருவரும் லஞ்ச ஓழிப்பு போலீசார் கைது செய்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News